குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்போர் மீது கடும் நடவடிக்கை: மதுரை காவல்துறை ஆணையர்
மதுரை: குழந்தைகளை கொடுமைப்படுத்தி பிச்சை எடுக்கவைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை காவல்துறை ஆணையர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் சார்பாக மத்திய அரசின் சமூக நீதிமற்றும் ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி உதவியுடன் பிச்சைகாரர்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆய்வு பணி மதுரையில் தொடங்கியது.
இந் நிகழ்ச்சியில் காவல்துறை ஆணையாளர் கண்ணப்பன் பேசியதாவது:
பிச்சைகாரர்களின் வாழ்க்கை நிலை குறித்த ஆய்வு பணி தொடங்கப்படுகிறது. பிச்சைகாரர்களில் சிலர் குழந்தைகளையும் வைத்து பிச்சை எடுக்கின்றனர். இன்னும் சிலர் வாடகைக்கு எடுத்தோ அல்லது திருடியோ குழந்தைகளைப் கொடுமைப்படுத்தி பிச்சை எடுக்க வைக்கின்றனர்,
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை பற்றிய தகவல்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் உடனே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சமூக அறிவியல் கல்லூரியின் இணைப் பேராசிரியர் கண்ணன், கல்லூரியின் தலைவர் ராஜா, மேயர் ராஜன்செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் ஆறுமுக நயினார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications