சஸ்பென்சன் முடிந்தது.. விஜயகாந்த் சட்டசபைக்கு எப்போது வருவார்?
சென்னை: சபாநாயகர் விதித்த சஸ்பெண்ட் தண்டனை முடிந்த பிறகும் கூட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சட்டசபைப் பக்கம் பார்க்க முடியவில்லை. அவர் எப்போது வருவார் என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லை.
பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு நடந்த கூட்டத் தொடரில் விஜயகாந்த் படு ஆவேசமாக நடந்து கொண்டதால் 10 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதிமுக உறுப்பினர்கள் எதையோ பேச, அதற்குக் கடும் கோபத்துடன் படு வேகமாக தனது இருக்கையிலிருந்து எழுந்து, கைகளை உயர்த்தியும், விரல்களை நீட்டியும், நாக்கை மடித்தும், உதடுகளை கடித்தபடியும் படு கோபமாக பேசினார் விஜயகாந்த்.
இதையடுத்து விஜயகாந்த்தை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் ஜெயக்குமார். இந்த சஸ்பெண்ட் தண்டனை தற்போது முடிந்து விட்டது. இருப்பினும் இன்றும் சரி, நேற்றும் சரி விஜயகாந்த் சட்டசபைக்கு வரவில்லை.
இனி நாளை முதல் ஞாயிறு வரை சட்டசபைக்கு விடுமுறை. எனவே திங்கள்கிழமைக்குப் பிறகுதான் விஜயகாந்த்தை சட்டசபைப் பக்கம் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது. தேமுதிகவினர் தரப்பிலும் கூட விஜயகாந்த் அடுத்து எப்போது சட்டசபைக்கு வருவார் என்பது குறித்து எந்தத் தெளிவும் இல்லை.












Click it and Unblock the Notifications