அமெரிக்கா எனது தலைக்கு விலை வைத்ததே தீவிரவாதம்தான்.. ஹபீஸ் சயீத்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: அமெரிக்கா எனது தலைக்கு ரூ. 50 கோடி விலை வைத்திருப்பதே ஒரு தீவிரவாதச் செயல்தான். இந்தியாவின் தூண்டுதலால்தான் இவ்வாறு அறிவித்துள்ளது அமெரிக்கா என்று பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை நிறுவியவரான ஹபீஸ் முகம்மது சயீத் தெரிவித்துள்ளான்.

லஷ்கர் இ தொய்பாவை நிறுவி பின்னர் அதன் பெயரை ஜமாத் உத் தவா என்று பெயர் மாற்றி செயல்பட்டு வரும் முக்கியத் தீவிரவாதி சயீத். பாகிஸ்தானில்தான் இவன் பதுங்கியுள்ளான். இவன்தான் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையும் ஆவாவன். இவனது தலைக்கு தற்போது அமெரிக்கா ரூ. 50 கோடி விலை வைத்துள்ளது.

பாகிஸ்தானில் பத்திரமாக இருந்து வரும் சயீத்துக்கு இவ்வளவு பெரிய விலையை அமெரிக்கா வைத்திருப்பது பாகிஸ்தான் அரசுக்குப் பெரும் நெருக்கடியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சயீத் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளான்.

இதுகுறித்து அவன் கூறுகையில், இந்தியாவின் தூண்டுதலின்பேரில்தான் இவ்வாறு அறிவித்துள்ளது அமெரிக்கா. இதுவே ஒரு தீவிரவாத செயல்தான். ஒருவரின் தலைக்கு விலை வைப்பது என்பதும் கூட ஒரு வகையில் தீவிரவாத செயல்தான்.

இந்தியாவுக்காக இதைச் செய்கிறது அமெரிக்கா. இப்படிச் செய்வதன் மூலம் எங்களை முட்டாளாக்கப் பார்க்கிறது.

ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் நேட்டோ படையினரின் வாகனங்கள், உணவு சப்ளை உள்ளிட்டவற்றை தடுக்க வேண்டும் என்று நான் பாகிஸ்தான் அரசை தீவிரமாக வலியுறுத்தி வருகிறேன், போராடி வருகிறேன். இதனால்தான் என் மீது பழிவாங்கும வகையில் நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.

எங்களது இயக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகிறது. இது அமெரிக்காவை அச்சுறுத்துவதாக உள்ளது என்றார் சயீத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+