தடம் புரண்டுபோன ராம்தேவ் இயக்கத்துல நானாவது சேருவதாவது - லாலு

பாட்னாவில் செய்தியாளர்களிடம் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:
ராணுவ விவகாரம்
டெல்லியை நோக்கி ராணுவத்தின் 2 படைப் பிரிவுகள் நகர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கான வாய்ப்பு ஒருபோதும் இல்லை. இது என்ன பாகிஸ்தானா? இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு ராணுவத்துக்கும் அரசாங்கத்துக்குமான உறவு நல்ல முறையிலேயே உள்ளது. இத்தகைய சர்ச்சை தேவையற்றது.
ராம்தேவிடம் மன்னிப்பா?
யோகா குரு ராம்தேவிடம் மன்னிப்பு கேட்டதாக அவர் கூறிக் கொண்டிருக்கிறார். நான் ஏன் அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். எனது மகளின் திருமணத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன்.
ராம்தேவின் போராட்டத்தில் ஒருபோதும் நான் இணையப்போவதே இல்லை. உண்மையைச் சொல்வதானால் ராம்தேவின் போராட்டம் ஏற்கெனவே தடம் புரண்டுவிட்டது.
சி.பி.ஐ. விசாரணை
பீகார் மாநில அரசு நிதிமுறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கணக்குத் தணிக்கைத் துறை குற்றம்சாட்டியுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேர்மையானவராக இருந்தால் சி.பி.ஐ விசாரணைக்கு அவர் உத்தரவிட வேண்டும்.
மேலும் ராப்ரி தேவியை மாநிலங்களவை உறுப்பினராக்குவது பற்றி தமது கட்சிதான் முடிவு செய்யும்தே தவிர தாம் அல்ல என்றார் அவர்












Click it and Unblock the Notifications