ஸ்டாலின் முன்பு தாத்தா சுப.தங்கவேலன், பேரன் ரித்தீஷ் கோஷ்டிகள் கட்டிப்புரண்டு சண்டை!

வழக்கமாக ஸ்டாலின், அழகிரி கோஷ்டிகள்தான் மோதலில் இறங்குவார்கள். இப்போது ஒரு மாற்றமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் தாத்தா சுப. தங்கவேலன் மற்றும் அவரது பேரன் ரித்தீஷ் குமார் கோஷ்டிகள், ஸ்டாலின் கண் முன்பாகவே கடும் சண்டை போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுப. தங்கவேலன் பார்த்து ஆளாக்கி விட்டவர்தான் ரித்தீஷ் குமார். எடுத்த எடுப்பிலேயே மேலிடத்தில் நல்ல அறிமுகம் பெற்றதாலும், காசை இறக்கி விடுவதில் சற்றும் சளைக்காதவராக இருந்ததாலும் ரித்தீஷ்குமாருக்கு ராமநாதபுரம் எம்.பி. தொகுதியை திமுக மேலிடம் கொடுத்தது. அவரும் ஜெயித்து எம்.பியாகி விட்டார்.
அதன் பின்னர் அவர் தாத்தாவுக்கே ஆப்பு வைக்க ஆரம்பித்தார். தாத்தாவின் பேச்சை கண்டு கொள்ளாமல் தன் போக்குக்குப் போக ஆரம்பித்தார். இதனால் இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் வெடிக்க ஆரம்பித்தது.
இதில் சுப. தங்கவேலன் கோஷ்டியைச் சேர்ந்த திமுக செயலாளர் ஒருவரை ரித்தீஷ் குமார் ஆள் வைத்துக் கடத்திய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கடத்தில் ஈடுபட்ட கும்பலில் இடம் பெற்றிருந்த கேரள ரவுடியைத்தான் சமீபதில் திண்டுக்கலில் வைத்து போலீஸார் என்கவுண்டரில் போட்டுத் தள்ளினர். கடத்தல் கும்பலைச் சேர்ந்த பிரபல மதுரை ரவுடி வரிச்சியூர் செல்வம்தான் போலீஸாரிடம் ரித்தீஷ் குமார் குறித்துப் போட்டுக் கொடுத்தார்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கான திமுக இளைஞர் அணி நேர்காணல் நடைபெற்றது. மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த நேர்காணலில் சுப. தங்கவேலன் ஆதரவாளர்கள் மற்றும் ரித்தீஷ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது, தங்கவேலன் ஆதரவாளர் கார்மேகம் தலைமையிலான குழுவுக்கும், ரித்தீஷின் ஆதரவாளர் நல்ல சேதுபதி கும்பலுக்கும் இடையே பதவி தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இது பெரும் அடிதடியாக மாறி கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். சட்டைகள் கிழிந்தன, கும்மாங் குத்துக்கள் சரமாரியாக விழுந்தன.
இதில் தங்கவேலன் தரப்பைச் சேர்ந்த மாவட்ட அவைத் தலைவர் முத்துராமலிங்கம் படுகாயமடைந்து விழுந்தார். உடனே அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
ஸ்டாலினை வைத்துக் கொண்டே தங்கவேலன், ரித்தீஷ் கோஷ்டியினர் சண்டை போட்டுக் கொண்டது திமுக வட்டாரத்தில் சலசலப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ரித்தீஷ் ஆதரவாளர்கள் மீதும், ரித்தீஷ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கவேலன் தரப்பினர் திமுக மேலிடத்தை வலியுறுத்தியுள்ளனராம். ரித்தீஷ் குமார் மு.க.அழகிரி கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications