ஆர்ப்பாட்டம், போராட்டமாகும், மறியலாகும், சிறைகளையும் நிரப்பவோம்- ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil

மின் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை பனகல் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், மின் கட்டண உயர்வை அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் இன்று நடைபெறுகிற ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறலாம், அது சாலைகளை மறிக்கும் மறியல் போராட்டமாக மாறலாம். உண்ணாவிரதமாக மாறலாம், ஏன் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளை நிரப்பும் போராட்டமாகவும் அது உருவெடுக்கலாம் என்றார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆயிரக்கணக்கான திமுகவினர் திரண்டு வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications