சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் சுழன்று பணியாற்றிய தொண்டர்களுக்கு மதிமுக விருந்து
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பணியாற்றிய மதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு விருந்து வைத்து அமர்க்களப்படுத்தியது ம.தி.மு.க.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதி்முக வேட்பாளர் முத்துசெல்வி 94 ஆயிரத்து 977 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் 20 ஆயிரத்து 678 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். ஆனாலும் திமுக, அதிமுகவுக்கு போட்டியாக சளைக்காமல் "பம்பரமாக" சுழன்று பணியாற்றியதற்காக தொண்டர்களுக்கு விருந்து வைத்து பாராட்டு விழா நடத்தியது மதிமுக.
இந்த விருந்து நிகழ்ச்சிக்கு முன்னதாக மதிமுக வேட்பாளர் சதன்திருமலைக்குமார் பேசியதாவது:
இடைத்தேர்தலில் மக்கள் மத்தியில் பணமா, பாசமா என்ற போராட்டத்தில் பணத்திற்கே வெற்றி கிடைத்துள்ளது. ஆளும் கட்சியினரின் பண பலத்திற்கு பல கட்சியினரும் விலை போயினர். ஆனால் மதிமுகவினர் யாரும் அப்படி விலை போகாமல் தேர்தல் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் புரோட்டா, இட்லி, தோசை, மட்டன், சிக்கன், முட்டை, ஐஸ்கீரிமுடன் விருந்து பரிமாறப்பட்டது.












Click it and Unblock the Notifications