சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர்,கழிவுநீர் அகற்றும் திட்டங்களுக்கு ரூ 2000 கோட

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளில் குடிநீர் வழங்கவும் கழிவுநீர் அகற்றும் வசதிகளை மேற்கொள்வதற்காகவும் ரூ2 ஆயிரம் கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று கூறியதாவது:

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக சேர்க்கப்பட்ட 32 வார்டுகளில் ரூ.700 கோடியில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் அந்த வார்டுகளில் ரூ.1300 கோடி செலவில் கழிவுநீர் அகற்றும் வசதியும் ஏற்படுத்தித் தரப்படும்.

அரக்கோணம், பழனி உள்ளிட்ட 22 நகரங்களில் ரூ.2355 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 12,197 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார் அவர்.

சென்னை மாநகராட்சி விரிவாக்கம்

174 சதுர கிலோமீட்டர் பரப்பரளவு கொண்ட சென்னை மாநகராட்சியை 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவாக கடந்த ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. சென்னை புறநகரில் உள்ள 42 உள்ளாட்சி அமைப்புகளும் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், மணலி, கத்திவாக்கம், உள்ளகரம்-புழுதிவாக்கம், ஆலந்தூர் உள்பட 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் 25 பஞ்சாயத்துகளை ஆகியவை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+