வாழப்பாடி அருகே விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை சீரழித்தவன் கைது
வாழப்பாடி: வாழப்பாடி அருகே 13 வயது சிறுமியை கற்பழித்த காமக்கொடூரன் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டான்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன். அவரது மகள் மல்லிகா (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் பக்கத்து வீட்டிலுள்ள குழந்தைகளுடன் மல்லிகா விளையாடினார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தறித் தொழிலாளியான பங்காருசாமி(26) மல்லிகாவை வழிமறித்து அவரது வாயில் துணியை திணித்து வீட்டிற்குள் தூக்கிச் சென்று கற்பழித்துள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மல்லிகா தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது பற்றி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அவர்கள் புகாரின்பேரில் வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சிறுமியை கற்பழித்த காமக்கொடூரன் பங்காருசாமி, அவனுக்கு துணையாக இருந்த அவனது பெற்றோர்கள் கந்தசாமி, சம்பூரணம் மற்றும் மணி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications