சென்னை அரும்பாக்கத்தில் வியாபாரிகள் சங்கத் தலைவர போட்டுத்தள்ளிய மர்ம கும்பல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சூளைமேட்டில் வியாபாரிகள் சங்கத் தலைவர் முகமது ரபீக்கை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தது.

சூளைமேடு பெரியார் பாதையைச் சேர்ந்தவர் முகமது ரபீக். இவர் முஸ்லிம் சிறுபான்மையினர் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம் என்ற பெயரில் தனி சங்கத்தை தொடங்கி அதன் தலைவராக செயல்பட்டு வந்தார். அரும்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் மீன்மார்க்கெட்டுகளையும் நடத்தி வந்தார்.

நாள்தோறும் இரவு நேரத்தில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள ஆதிலா மேன்சனில் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்து வீட்டுக்குச் செல்வது முகமது ரபீக்கின் வழக்கம். இதன்படி நேற்று இரவு ஆதிலா மேன்சனில் கணக்குகளைப் பார்த்துவிட்டு திரும்பிய ரபீக்கை அதற்கு அருகே உள்ள தெருவில் மறைந்திருந்த கும்பல் சராமாரியாக தாக்கி போட்டுத்தள்ளியது. ரத்தவெள்ளத்தில் கிடந்த ரபீக் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.

யார் காரணம்?

ரபீக் தலைவராக இருந்த சங்கத்தின் சார்பில் சில நாட்களுக்கு முன்பு தண்ணீர்பந்தல் திறக்கப்பட்டது. அதில் சங்கத்தின் செயலாளர் சலீம்பாபுவின் பெயர் இடம்பெறவில்லை என்று கூறி தகராறு நடந்துள்ளது. இது குறித்து சலீம்பாபுவும் அவரது சகோதரி காதர்பீவியும் முகமது ரபீக்கின் வீட்டுக்கே சென்று எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இவர்கள் இருவரும் தலைமறைவாகவும் உள்ளனர். இதனால் இவர்கள்தான் கூலிப்படை மூலம் முகமது ரபீக்கை கொலை செய்திருப்பார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+