சியாச்சின் எல்லை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: அமெரிக்கா
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலந்த் கூறியதாவது:
சியாச்சின் எல்லை விவகாரத்தைப் பொறுத்தவரையில் இந்தியா-பாகிஸ்தான் இருநாடுகளும் தங்களுக்குள் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஆக்கப்பூர்வமான உதவிகளை அமெரிக்கா வழங்கத் தயாராக இருக்கிறது.
பனிப்பாறை சரிவு
சியாச்சின் பனிப்பாறை சரிவில் சிக்கிய 150 பாகிஸ்தான் படையினரை மீட்பதற்காக உதவுமாறு அந்நாடு கோரியிருந்தது. இதையடுத்து அமெரிக்க படையின் 8 பேர் கொண்ட வல்லுநர் குழு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு சியாச்சின் பகுதிக்கு சென்று உதவும். இதுவரையில் கூடுதலாக வேறு வகையிலான உதவியை பாகிஸ்தான் கோரவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications