சென்னையில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்-கட்டடங்கள் ஆடின-மக்கள் ஓட்டம்-பெரும் பீதி!

Subscribe to Oneindia Tamil

Earthquake
சென்னை: சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் கிடுகிடுவென ஆடின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டும் கட்டடங்களை விட்டும் வெளியேறினர்.

சென்னையில் பிற்பகல் 2.15 மணிக்கு 6.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. பிற்பகல் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு, மாலை 4.19 க்கு மீண்டும் லேசான நில அதிர்வுகளை சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.4 புள்ளிகளாக இருந்தது. இதைத் தொடர்ந்து 5.45 மணிக்குள் அடுத்தடுத்து மேலும் இரு முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன

இந்த நிலநடுக்கம் நகரின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, எழும்பூர், நந்தனம், ஆழ்வார்ப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்டபல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர்.

அரசு அலுவலகங்கள் நிரம்பியுள்ள சேப்பாக்கம் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அரசு ஊழியர்கள் பயந்து வெளியேறினர். சில விநாடிகளுக்கு கட்டடங்கள் கிடுகிடுவென ஆடியதால் அவர்கள் பீதியடைந்தனர். கட்டடங்கள் ஆடியதால் மேசை, சேர்களும் ஆடியுள்ளன. மேலும் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் ஆடியதால் அனைவரும் பீதியடைந்தனர்.

யாரோ பிடித்து உலுக்கியது போல கட்டடங்கள் வேகமாக ஆடியதால் ஊழியர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. அனைவரும் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இதேபோன்ற நிலநடுக்கத்தையும், ஆட்டத்தையும் நகரின் பல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர். சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததால் நகர் முழுவதும் பெரும் பீதி காணப்படுகிறது. மக்கள் வீடுகளை விட்டும், கட்டடங்கள், அலுவலகங்களை விட்டும் வெளியேறியுள்ளனர்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர், கோடியக்கரை உள்பட ல இங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நந்தனம் 8 மாடி கட்டடத்திலிருந்து ஊழியர்கள் ஓட்டம்

நந்தனம் பகுதியில் உள்ள சேவை வரி விதிப்பு (service tax) அலுவலகம் அமைந்துள்ள 8 மாடி கட்டடம் குலுங்கியது. இதனால் அலுவலகத்தில் இருந்தவர்கள் பதறி அடித்துக்கொண்டு வெளியேறினர்.

நில அதிர்வு குறித்து உணர்ந்தவர்கள் கூறியதாவது:

2மணி 15 நிமிடத்தில் கட்டடம் திடீரென்று குலுங்கியது. யாரோ தள்ளிவிட்டது போல உணர்ந்தோம். உடனே பதறியபடி வெளியேறிவிட்டோம் என்று கூறினர்.

சைதாப்பேட்டை, தி. நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியுடன் அலுவலகங்களையும், வீடுகளையும் விட்டு வெளியேறினர்.இதனால் அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலக ஊழியர்களும் ஓட்டம்

இதேபோல சென்னை தலைமைச் செயலக அலுவலகப் பகுதியிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் ஆடியதால் ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+