இலங்கை செல்லும் குழுவில் அனைத்து கட்சி எம்.பி.க்கள்: 14ல் பிரதமரை சந்திக்கும் பாஜக

Subscribe to Oneindia Tamil

மதுரை: இலங்கைக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்த தானும், இல.கணேசனும் வரும் 14ம் தேதி பிரதமரை சந்திக்கவிருப்பசாக பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை விரகனூர் ரிங்ரோட்டில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் பாஜக மாநில மாநாடு நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. பந்தல் அமைக்கும் பணியைப் பார்வையிட பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மதுரைக்கு நேற்று வந்தார்.

பணிகளைப் பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மதுரை நடக்கும் மாநில மாநாட்டில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜக மாநில தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் ஒரு லட்சம் பேர் பாஜகவில் இணையவிருக்கிறார்கள். இது தமிழகத்தில் பாஜகவிற்கு திருப்புமுனையை ஏற்படுத்தும்.

வரும் 28ம் தேதி மாநாடு துவங்குகிறது. வரும் 29ம் தேதி பிரதிநிதிகள் மாநாடும், 30ம் தேதி பாஜகவின் சாதனைகளை எடுத்துக்கூறும் கண்காட்சியும் நடக்கிறது. சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கைக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதகளும் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்த நானும், இல. கணேசனும் வரும் 14ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தவிருக்கிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+