மதுரை பாஜக மாநாட்டிற்கு பின் அரசியல் சூழல் தலைகீழாகும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரை ரிங்ரோட்டில் பாஜக மாநாடு பணிகளை ஆய்வு செய்ய வந்த தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ரிங்ரோட்டில் 67 ஏக்கரில் அமைந்த முன்னாள் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி திடலில் மாநாடு நடைபெறுகிறது. அரங்கத்திற்கு முன்னாள் பொருளாளர் சுகுமாறன் நம்பியார் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாட்டில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ் தாய் யாத்திரை நடந்து வருகிறது. மகளிரணி சார்பில் கண்ணகி யாத்திரை, இளைஞர்கள் சார்பில் பாரதியார் யாத்திரை, தாழ்த்தப்பட்டோர் சார்பில் அம்பேத்கர் சிலை ஊர்வலம் நடக்கின்றன.
மாநிலத்திலும், மத்தியிலும் பாஜக ஆட்சி மலர்வதை உணர்த்த மாநாட்டில் நாடாளுமன்றம், சென்னை ஜார்ஜ் கோட்டை மாதிரிகள் அமைக்கப்படும். மாநாட்டு பந்தல் முகப்பில் 10 அடி உயரத்தில் கோட்டை சுவர் அமைக்கப்படுகிறது. 27 லட்சம் சதுரடி அரங்கில் ஒரு லட்சம் இருக்கைகள் போடப்படும். ஏப்ரல் 28 காலை நுழைவு கட்டணம் ரூ.10 வசூலிக்கப்படும். மாலை பொதுக் கூட்டத்தில் மக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.
பாஜக சாதனைகளை விளக்கும் கண்காட்சி நடைபெறும். மாநாட்டிற்கு பின்பு அரசியல் சூழல் தலைகீழாக மாறும். எதிர்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கை செல்லும் குழுவில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் இடம் பெறச்செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications