டெல்லி கார் குண்டுவெடிப்பு விசாரணை: இந்தியாவுக்கு ஈரான் அழைப்பு
டெல்லி: டெல்லியில் இஸ்ரேலிய தூதரக கார் குண்டுவெடிப்பு மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வருமாறு இந்தியாவுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லியில் பிப்ரவரி 13-ந் தேதி இஸ்ரேல் தூதரக காரை காந்த ஸ்டிக்கர் மூலம் குண்டுவைத்து தகர்த்த சம்பவத்தில் 4 ஈரானியர்களுக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து இண்டர்போல் உதவியுடன் அவர்களுக்கு ரெட் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஈரான் இது தொடர்பாக எதுவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தது.
அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு கோரி ஈரான், மலேசியா, தாய்லாந்து நாடுகளுக்கும் டெல்லி போலீஸ் கடிதம் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு இஸ்ரேலிய கார் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த வருமாறு டெல்லி போலீஸாருக்கு ஈரான் அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானின் அணுவிஞ்ஞானிகளின் தொடர் படுகொலைக்கு பழிவாங்கும் விதமாக டெல்லி, பாங்காங், ஜார்ஜியாவில் இஸ்ரேலிய தூதரகங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications