கோரிக்கைகளில் தளர்வு- ஏப்ரல் 18-ந் தேதி வரை புதிய கெடு விதித்தனர் மாவோயிஸ்டுகள்
கோரபுட்: ஒடிசாவில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வை விடுவிக்க மாவோயிஸ்டுகள் தங்கள் கெடுவை ஏப்ரல் 18-ந் தேதிவரை நீட்டித்துள்ளனர்.
ஆந்திர- ஒடிசா எல்லையோர மாவோயிஸ்டுகளின் மண்டலக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது கோரிக்கையான 29 மாவோயிஸ்டு உறுப்பினர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளதாக கோரபுட்டில் வழக்கறிஞர் நிகார் ரஞ்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
மூத்த தலைவரான சென்டா பனுசானம் உட்பட 30 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் கோரியிருந்தனர். அவரை விடுதலைசெய்ய ஒடிசா மாநில போலீசார் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இதனால் எம்.எல்.ஏவை விடுவிப்பதில் முட்டுக்கட்டை நீடித்து வந்தது.
தற்போது மாவோயிஸ்டுகளும் தங்களது கோரிக்கைகளில் தளர்வை வெளிப்படுத்தியுள்ளதால் அனேகமாக எம்.எல்.ஏ. வை விடுவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications