திருச்செந்தூர் கோயிலில் பேட்டரி கார் அறிமுகம்: அமைச்சர் துவக்கி வைத்தார்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் புதிய பேட்டரி காரை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர் முருகன் கோயில். அங்கு எப்பொழுதுமே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஆகியோர் கோயில் பிரகாரத்தில் எளிதாக சென்று சுவாமி தரிசனம் செய்ய வசதியாக பேட்டரி கார் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.3.75 லட்சம் செலவில் புதிய பேட்டரி கார் வாங்கப்பட்டது.
பேட்டகரி காரை பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடும் விழா நேற்று நடந்தது. சந்த மண்டம் முன்பு, கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேட்டரி காரை கொடி அசைத்து இயக்கி வைத்தார்.
பேட்டரி கார் காலை கோயில் நடை திறக்கப்பட்டது முதல் இரவு நடை சாத்தப்படும் வரை பக்தர்களின் பயன்பாட்டுக்காக இலவசமாக இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications