உதயகுமார் பள்ளிக்கு இழப்பீடு வழங்க உண்மை அறியும் குழு வலியுறுத்தல்

கூடங்குளம அணு மின் நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நடத்தி வரும் பள்ளி நாகர்கோவில் கீழப்புல்லுவிளையில் உள்ளது. இந்த பள்ளி மீது கடந்த மாதம் 3ம் தேதி, 20ம் தேதிகளில் நடத்த தாக்குதல் குறித்து உண்மை நிலையை கண்டறிய பேராசிரியர்கள் அடங்கிய நெலலை ஆசிரியர் கூட்டமைப்பு கடந்த மாதம் 3ம் தேதி ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வு குறித்து பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் அமலநாதன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது,
உதயகுமாரின் பள்ளி மீதான தாக்குதலால் அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த பள்ளிக்கு முழுமையான அரசு பாதுகாப்பு அளிப்பதுடன் தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எதிர்காலத்தில் தாக்குதல் நடக்காமல் தடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தாக்குதலுக்கு ஆளான பள்ளிக்கு ஏற்பட்ட இழப்பீட்டை உடனே மதிப்பீடு செய்து அரசு வழங்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications