காஞ்சீபுரம் 'செக்ஸ்' அர்ச்சகர் தேவநாதன் வழக்கு: மே 16ம் தேதி விசாரணை

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தவர் தேவநாதன் (35). கோவில் கருவறையில் பல பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு அதை தனது செல்போனிலேயே படம் பிடித்து வைத்து வந்தார்.
இவரது செல்போன் ரிப்பேருக்குப் போனபோது அந்த வீடியோக்கள் வெளியே பரவின. இதையடுத்து இவர் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து தலைமறைவான தேவநாதன் காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரை கைது செய்து போலீசார் விசாரித்த போது கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களை மயக்கி கருவறைக்குள்ளேயே வைத்து தேவநாதன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. இவர் தந்த வாக்குமூலத்தையடுத்து இதில் சம்பந்தப்பட்ட 4 பெண்களையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
கோவிலுக்கு சென்ற போது அர்ச்சகர் தேவநாதன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கருவறைக்குள் அழைத்து சென்று உறவு வைத்தாகவும், இதை செல்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டு அதை காட்டி மிரட்டியே கோவில் கருவறையில் செக்ஸ் லீலையில் ஈடுபட்டார் என்றும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இந் நிலையில் தேவநாதன் கடந்த 2010ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். அவர் எந்தக் கோவிலிலும் அர்ச்சனை செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் இருந்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், இந்த நீதிமன்றத்தில் கடந்த 10 மாதங்களாக நீதிபதியே இல்லாததால் எந்த வழக்கு விசாரணையும் நடக்கவில்லை.
எல்லாமே தேங்கிக் கிடந்தன. இந் நிலையில் செங்கல்பட்டு தலைமைக் குற்றவியல் நீதிபதியாக பணிபுரிந்த ஆனந்தி, பதவி உயர்வு பெற்று செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 28ம் தேதி பொறுப்பேற்றதையடுத்து தேங்கிக் கிடந்த வழக்கு விசாரணைகள் மீண்டும் தொடங்கின.
இதில், செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு அடுத்த மாதம் 16ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications