காஞ்சீபுரம் 'செக்ஸ்' அர்ச்சகர் தேவநாதன் வழக்கு: மே 16ம் தேதி விசாரணை

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தவர் தேவநாதன் (35). கோவில் கருவறையில் பல பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு அதை தனது செல்போனிலேயே படம் பிடித்து வைத்து வந்தார்.
இவரது செல்போன் ரிப்பேருக்குப் போனபோது அந்த வீடியோக்கள் வெளியே பரவின. இதையடுத்து இவர் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து தலைமறைவான தேவநாதன் காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரை கைது செய்து போலீசார் விசாரித்த போது கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களை மயக்கி கருவறைக்குள்ளேயே வைத்து தேவநாதன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. இவர் தந்த வாக்குமூலத்தையடுத்து இதில் சம்பந்தப்பட்ட 4 பெண்களையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
கோவிலுக்கு சென்ற போது அர்ச்சகர் தேவநாதன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கருவறைக்குள் அழைத்து சென்று உறவு வைத்தாகவும், இதை செல்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டு அதை காட்டி மிரட்டியே கோவில் கருவறையில் செக்ஸ் லீலையில் ஈடுபட்டார் என்றும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இந் நிலையில் தேவநாதன் கடந்த 2010ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். அவர் எந்தக் கோவிலிலும் அர்ச்சனை செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் இருந்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், இந்த நீதிமன்றத்தில் கடந்த 10 மாதங்களாக நீதிபதியே இல்லாததால் எந்த வழக்கு விசாரணையும் நடக்கவில்லை.
எல்லாமே தேங்கிக் கிடந்தன. இந் நிலையில் செங்கல்பட்டு தலைமைக் குற்றவியல் நீதிபதியாக பணிபுரிந்த ஆனந்தி, பதவி உயர்வு பெற்று செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 28ம் தேதி பொறுப்பேற்றதையடுத்து தேங்கிக் கிடந்த வழக்கு விசாரணைகள் மீண்டும் தொடங்கின.
இதில், செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு அடுத்த மாதம் 16ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications