டாஸ்மாக்கில் குறைந்த விலையில் வெளிநாட்டு மது

டாஸ்மாக்கில் மதுபானங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வசதி மிக்க குடிமகன்களையும் கவரும் வகையில் வெளிநாட்டு தயாரிப்பு மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குவாட்டருக்கு ரூ.300க்கு மேல் விலையுள்ளதால் நடுந்தர மக்கள் மற்றும் ஏழை குடிமகன்கள் அதன் அருகே நெருக்ககூட முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் நடுந்தர குடிமகன்களுக்கும் வெளிநாட்டு மதுபானங்களை ருசிக்கும் வகையில் புதிய வகை மதுபானம் அறிமுகம் செய்யப்பட்டது. க்ளோவிஸ் எக்ஸ் ஓ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வகை மதுபானத்தை ஜியோஸ்கோப் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கசப்பு சுவை இன்றி மைல்டாக் இருக்கவும், ஒரு வித நறுமணம் வீசுவதற்காக இரண்டு முறை இது பதப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கெட்ட வாடையும் இருக்காது. சைடு டிஷ்ஷும் தேவையில்லை. தண்ணீரை கலந்து அப்படியே சாப்பிடலாம். சிறிது சிறிதாக குவட்டார் அருந்தினாலே ஆப் அடிப்பதற்கான போதை கிடைக்கும். வெளிநாட்டு மது வகைகளை ஒப்பிடுகையில் இதன் விலை பாதியாக இருக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குவாட்டார் விலை ரூ.155, ஆப் ரூ.305, புல் ரூ.605 ஆகும்.












Click it and Unblock the Notifications