சியாச்சினிலிருந்து விலக இந்தியாவும் ஒப்புக் கொண்டால்தான் வெளியேறுவோம்!- சர்தாரி
லாகூர்: இந்திய- பாகிஸ்தான் எல்லையான இமயமலையின் சியாச்சின் மலைப் பகுதியிலிருந்து இந்தியாவும் படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புக் கொண்டால் மட்டுமே பாகிஸ்தான் நாட்டு படைகள் வெளியேறும் என்று அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
சியாச்சின் மலைப்பகுதியில் பனிப்பாறை சரிவு ஏற்பட்டதால் அந்நாட்டு ராணுவ வீரர்கள் 138 பேர் புதையுண்டு போனதைத் தொடர்ந்து சியாச்சினிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ளப்படுவது பற்றி விவாதிக்கப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவ தளபதி கியானிதான் முதலில் இக்கருத்தை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சர்தாரி தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
லாகூர் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சர்தாரி, சியாச்சின் மலைப் பகுதியில் இருந்து பாகிஸ்தான் மட்டுமே படைகளை விலக்கிக் கொள்ளப் போவதில்லை. இந்தியாவும் அங்கிருந்து வெளியேறுமேயானால் பாகிஸ்தான் படைகளும் தமது ராணுவத்தை விலக்கிக் கொள்ளும் என்றார் அவர்.
அவர் மேலும் பேசியதாவது:
இந்தியாவும் பாகிஸ்தானும் சியாச்சினில் நிலைநிறுத்தப்பட்ட ராணுவ வீரர்களது நிலைமை குறித்து கவலை தெரிவித்து வருகிறது. உலகிலேயே மிகவும் கடினமான போர்முனைப் பகுதி சியாச்சின்தான் என்பதில் இருவேறு கருத்து எதுவும் இல்லை. அந்தப் பகுதியின் மோசமான வானிலை பற்றி நாங்கள் நன்கு அறிவோம். உலகின் வேறு எந்த பகுதியிலும் இப்படி ஒரு வானிலை நிலவாது.
இந்தியாவுடனான விவகாரங்களை பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க பாகிஸ்தான் விரும்புகிறது. அனைத்து விவகாரங்கள் குறித்தும் இந்தியாவுடன் பேச பாகிஸ்தான் விரும்புகிறது என்றார் அவர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications