வண்டல் மண் அள்ளும் பிரச்சனை: காங்.-அதிமுக நிர்வாகிள் அடிதடி
நாகர்கோவில்: குளங்களில் வண்டல் மண் எடுக்கும் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அதிமுக நிர்வாகி தாக்கப்பட்டார்.
நாகர்கோவில் சாத்தன்செட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் அசோகன். குமரி மாவட்ட பாசனத்துறை சேர்மனாக இருப்பவர் வி்ன்சென்ட். காங்கிரஸ் நிர்வாகி. குமரி மாவட்ட குளங்களில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலை வின்சென்ட் நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அசோகனும் அங்கு வந்தார். மண் எடுப்பது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி மோதலில் முடிந்தது. இதில் இரு தரப்பினரும் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதை தடுக்க முயன்ற துவரங்காட்டைச் சேர்ந்த பொதுப்பணிதுறை ஒப்பந்த ஊழியர் முருகன் என்பவரும் தாக்கப்பட்டார். இதனால் பொதுப்பணித்துறை அலுலவகம் பதட்டத்துடன் காணப்பட்டது. இந்த மோதலில் வி்ன்சென்ட் மற்றும் அவரது தம்பி வினோத் ஆகியோர் தாக்கப்பட்டனர்.