2 ஆண்டுகளில் 360 பேருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

Hanging rope
டெல்லி: நாடு முழுவதும் 2008-2010 ஆம் ஆண்டு காலத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் 360 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளதாக உள்துறை இணையமைச்சர் முல்லபள்ளி ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் இது தொடர்பாக கூறியதாவது:

தேசிய குற்றப் பதிவேட்டு ஆவணங்களின் படி மொத்தம் 360 மரண தண்டனைத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

2009-2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 மரண தண்டனை தீர்ப்புகளை உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளன.

2009-ம் ஆண்டு அக்டோபர் நிலவரப்படி 28 கருணை மனுக்கள் குடியரசுத் தலைவர் முன்பாக நிலுவையில் இருந்தன.

2009 அக்டோபர் முதல் 2012 ஏப்ரல் 19-வரை 6 கருணை மனுக்கள் வந்துள்ளன. மொத்தம் 34 கருணை மனுக்களில் 15 மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுத்துள்ளார். 19 மனுக்கள் நிலுவையில் உள்ளன என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+