ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல்: கனிமொழி நிதி ஆலோசகர்களிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் கலைஞர் டி.வி.க்காக பண பரிமாற்றம் நடந்தது என்பது புகார். இது தொடர்பாக விசாரணை நடத்த நேரில் ஆஜராகுமாறு கனிமொழி மற்றும் சரத்குமார் ஷெட்டிக்கு அமலாக்கப் பிரிவினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இதையடுத்து சரத்குமார் ஷெட்டி அமலாக்கப் பிரிவில் நேற்று ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணைக்கு கனிமொழி ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக அவரது நிதி ஆலோசகர்கள் ஆஜராகியிருந்தனர். அவர்களிடமும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி அவர்கள் தந்த தகவல்களைப் பதிவு செய்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications