'மண்ணைக் கவ்விய' உத்தரப் பிரதேசத்தில் ராகுல் முகாம்
Subscribe to Oneindia Tamil

உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக ராகுல்காந்து இன்று அம்மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டார். அவரது சொந்தத் தொகுதியான அமேதியிலும் கூட காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்திருந்தது. இருந்தாலும்கூட தமது தொகுதி மக்களின் குறை கேட்பதற்காக ராகுல் பயணம் மேற்கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
ராகுலின் பயணம் குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா, "அமேதி தொகுதியில் கட்சித் தொண்டர்களை சந்தித்துப் பேசும் ராகுல்காந்தி கட்சிக்கு உயிர்ப்பூட்டும் பணியை மேற்கொள்வார். தேர்தல் தோல்வி குறித்தும் அவர் ஆலோசனை நடத்துவார்' என்றார்.
மேலும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றுவதற்கான யுக்தியும் ராகுலின் இந்த பயணத்தின்போது வகுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications