என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்- மின் உற்பத்தியில் பாதிப்பு?

Subscribe to Oneindia Tamil

Power
நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 13 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணி நிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது என்.எல்.சி. நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு கைதாகி விடுதலையாகி வருகின்றனர்.

இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர பலசுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் உடன்பாடு ஏற்படவில்லை. ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்பதுதான் என்.எல்.சி. நிர்வகத்தின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உறுதியாக உள்ளனர்.

இதனிடையே இன்று பேரவையில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் என்.எல்.சி. விவகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்தால் லேசாக உயிர்பெற்றுள்ள மின்சாரமும் மீண்டும் கட் ஆகிவிடக் கூடிய நிலையை உருவாக்கிவிடக் கூடும்.

இந்த போராட்டத்தில் மொத்தம் 14 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+