குடியரசுத் தலைவர் தேர்தல் - கோரிக்கைகளை நிறைவேற்ற தருணம் பார்க்கும் மம்தா பானர்ஜி!

அவரை நிறுத்தக் கூடாது என்று ஏன் சொல்றீங்க? என்ற ரீதியில் ஒவ்வொரு கூட்டணியிலும் குத்து வெட்டு களைகட்டி வரும் நிலையில் கமுக்கமாக இருக்கிறார் அதிரடி தலைவரான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
சூடு பறக்கும் அரசியல் களத்தில் தற்போது டெல்லியில் மம்தா முகாமிட்டிருக்கிறார். மத்திய அரசு கொடுத்த கடனுக்கான வட்டியை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கெடு விதித்த கையோடு டெல்லியில் இருக்கிறார் மம்தா.
மம்தாவைப் பொறுத்தவரையில் தங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றுமேயானால் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் முன்னிறுத்தும் வேட்பாளரை அவர் ஆதரிக்கத் தயாராக இருக்கிறார் என்றே கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ரேணுகா சவுத்ரியும் கூட்டணி அரசாங்கத்தில் விட்டுக் கொடுத்து பலன் பெறுவதெல்லாம் சகஜம்தான் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அப்ல்துல் கலாமை வேட்பாளராக நிறுத்தினால் மம்தா ஆதரிக்க மாட்டார் என்றே கூறப்படுகிறது. மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியையோ அல்லது ஹமீத் அன்சாரியையோதான் மம்தா ஆதரிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இநிந்லையில் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்த மம்தா, அடுத்ததாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.












Click it and Unblock the Notifications