முத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவமாடிய பாம்பிடம் கடிபட்டு இறந்த கட்டிடத் தொழிலாளி

Subscribe to Oneindia Tamil

Snake
கோவை: முத்துக்கு ஆசைப்பட்டு ஆனந்த தாண்டவம் ஆடிய பாம்பிடம் கடிபட்டு கட்டிடத் தொழிலாளி ஒரு பரிதாபமாக உயிர் இழந்தார்.

கோவையை அடுத்த வீரகேரளம் அருகே உள்ள நாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராஜு என்ற ராஜ்குமார்(25). கட்டிடத் தொழிலாளி. அவர் கட்டிட வேலைக்காக சுண்டக்காமுத்தூருக்கு சென்றார். அங்குள்ள மருத்துவமனையின் பின்புறம் கட்டிட வேலை செய்தார். மதிய உணவின்போது மருத்துவமனை அருகே நாகப்பாம்பும், சாரைப்பாம்பும் பிண்ணிப் பிணைந்து ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தன.

இதைப் பார்த்ததும் அங்கு மக்கள் கூட்டம் கூடினர். ராஜ்குமாரும் அந்த நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த யாரோ ஒருவர் ஆனந்த தாண்டவமாடும் பாம்பிடம் முத்து இருக்கும் தெரியுமா என்று கூறினார். இதைக் கேட்ட ராஜ்குமார் அதை உண்மை என்று நினைத்து நாகப்பாம்பை பிடித்து முத்து இருக்கிறதா என்று பார்த்தார்.

அப்போது நாகப்பாம்பு அவரின் கையில் கடித்தது. சிறிது நேரத்தி்ல அவர் மயங்கினார். உடனே அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

முத்துக்கு ஆசைப்பட்டு பாம்பிடம் கடிபட்டு இறந்த ராஜ்குமாருக்கு லட்சுமி என்ற மனைவியும், 7 மாத குழந்தையும் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+