மதுரை: தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகளை கிணற்றில் வீசிய தந்தை
மதுரை: திருமங்கலம் அருகே தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகளை தந்தையே கிணற்றில் வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சம்பங்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(42). கூலித் தொழிலாளி. அவருக்கு அருண்(6) என்ற மகனும், சங்கவி(4) என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் வீட்டுக்கு அருகே தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுந்தர்ராஜன் திடீர் என்று குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு போய் அருகில் இருந்த கிணற்றில் போட்டுவிட்டு எனக்கு என்னவென்று எங்கோ சென்றுவிட்டார்.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பதறியடித்து ஓடி வந்து கிணற்றில் இறங்கி குழந்தைகளைத் தூக்கினர். அதில் அருண் நீரில் மூழ்கி இறந்துவிட்டான். சங்கவி மட்டுமே உயிர் பிழைத்தாள்.
உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெற்ற தந்தையே தனது குழந்தைகளை கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications