மே 22ம் தேதி பிளஸ்டூ தேர்வு முடிவு வெளியீடு-'தட்ஸ்தமிழில்' பார்க்கலாம்!

மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை பிளஸ்டூ தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுவையில் 8.22 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இவர்கள் தவிர 61,319 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதினர்.
தேர்வு முடிந்ததைத் தொடர்ந்து விடைத்தாள்களைத் திருத்தும் பணி தொடங்கியது. மின்னல் வேகத்தில்நடந்த இந்தப் பணியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் ஈடுபட்டனர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 30ம் தேதி முடிந்தது. இதையடுத்து தற்போது மதிப்பெண்களை பட்டியலிடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு முதல் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதனால் கூடுதல் கவனத்துடன் இந்தப் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்ற ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போனது. இதையடுத்து தற்போது அரசு அதிகாரப்பூர்வ தேதியை அறிவித்துள்ளது. அதன்படி மே 22ம் தேதி காலை 11 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, பிளஸ்-2 தேர்வு முடிவு வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்றார்.
உங்கள் தட்ஸ்தமிழில்...
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வழக்கம் போல உங்கள் தட்ஸ்தமிழ் இணையத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications