சென்னையிலிருந்து ஷீரடி சென்ற வாராந்திர ரயிலில் திட்டமிட்டு கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சோலாப்பூர்: சென்னையிலிருந்து ஷீரடி சென்ற வாராந்திர ரயிலை மஹாராஷ்டிராவின் சோலாப்பூர் என்ற இடத்தில் வழிமறித்து கத்திமுனையில் பயணிகளிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையிலிருந்து வாரந்தோறும் மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அருகே ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் முன்பதிவு அனைத்தும் முழுமையடைந்து கூட்டம் நிரம்பி வழிந்தநிலையில் ஷீரடி நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.

இந்த ரயில் மஹாராஷ்டிரா மாநிலம் சோலப்பூர் அருகே நள்ளிரவில் சென்று கொண்டிருந்த போது சிக்னல் கிடைக்காமல் நின்றது...பயணிகள் அனைவரும் அயர்ந்து உறங்கிக் கோண்டிருந்தனர். அப்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிக்குள் 15 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்தது. கத்தி முனையில் பயணிகளிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்றனர்.

ஷீரடி சாய்பாபாவின் தரிசனத்துக்குப் போகும் வழியில் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ25 ஆயிரம் பணத்தை பக்தர்கள் பறிகொடுக்க நேரிட்டது. சிக்னல் கோளாறை கொள்ளையர்களே ஏற்படுத்திவிட்டு கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சோலாப்பூர் பகுதியில்தான் அதிகளவில் ரயில் கொள்ளைச் சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிப் போய்விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+