ஒசாமா கொல்லப்பட்ட இடத்தில் அதிசய நீரூற்று?!?

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு ஓராண்டு ஆகி விட்டது. அவர் கொல்லப்பட்ட உடனேயே பல டுவிட்டர் அக்கௌண்டுகள் அவரது பெயரில் போலியாக துவங்கப்பட்டன. அவற்றில் இருந்து ஒசாமா பேசுவது போன்ற பல தகவல் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
ஒசாமா பெயரில் வலம் வரும் டுவிட்டர் கூத்துகளிலிருந்து சில துளிகள்...
- என் மனைவி ஏபிசி நியூஸிடம் பேசுகிறார். அவர் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கலாமா என்று என்னிடம் அனுமதி கேட்டதைவிட இது அவமதிக்கும் செயலாகும்.
- ஹாட் சாக்கலேட் குடிப்பது ஹராமாகும்.
- நான் இறந்தது போன்று பொய்யான தகவல் பரப்பியுள்ளேன். ஆனால் நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன். தற்போது உலகை சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். யார் கண்டது நான் உங்கள் ஊருக்கு கூட வரலாம். அருகில் உள்ள அல் கொய்தா கிளையைத் தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக் கொள்ளுங்கள்.
- நான் அல் கொய்தா தலைவராக இருந்தேன். தற்போது உயிருடன் இல்லை. என்னை நரகத்தில் வந்து பார்க்கலாம். நான் தான் தலைசிறந்த தீவிரவாதியாக இருந்தேன். கண்ணாமூச்சி ஆட்டத்தில் நான் தான் பெஸ்ட்.
- நான் இறந்திருக்கலாம் ஆனால் வாழ்க்கை தொடரத் தான் செய்யும். உலகில் 71 சதவீதம் கடல். அதனால் நான் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
- இதென்ன மே 1ல் ஒபாமா சர்பிரைஸ் விசிட்?
இதற்கெல்லாம் மேலாக ஒரு டுபாக்கூர் வெப்சைட் ஒசாமாவின் பேட்டியை வெளியிட்டுள்ளது. அதில் ஒசாமா அளித்த பேட்டி வருமாறு,
சொர்க்கத்தில் மட்டன் டிக்கா மசாலா கூட கிடைக்காததால் அங்குள்ளவர்கள் நரகத்திற்கு வர விரும்புகிறார்கள். நரகம் ரொம்ப ஜாலியாக இருக்கிறது. இங்கு உள்ள ஸ்டாலின், ஹிட்லர் எனது நண்பர்கள்.
நான் பூமியில் இருக்கும்போதே ஸ்டாலினை சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அடால்ப் ஹிட்லரும் நல்லவர் தான் ஆனால் கொஞ்சம் வளைந்து கொடுக்காதவர் என்றார்.
பின் லேடனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மக்கள் அவர் கொல்லப்பட்ட அப்போத்தாபாத் வீட்டிற்கு விசிட் அடித்தனர். மேலும் அந்த இடத்தில் மோட்டார் இன்றி நீரூற்று போல் தண்ணீர் வருகிறது என்றும் தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
நீரூற்றுக்கு உடைந்த பைப் காரணமாக இருக்கலாம். ஆனால் அந்த இடத்தில் அப்பாவிகள் கொல்லப்பட்டதால் தான் ஊற்று வந்துள்ளது என்று பலர் நம்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications