ஆலங்குளம் அருகே விவசாயி படுகொலை-ஜாதிக் கலவரம் வெடிக்கும் அபாயம்!

Subscribe to Oneindia Tamil

ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே சிவனார்குளம் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் அந்தக் கிராமத்திலும், அருகாமை கிராமங்களிலும் ஜாதிக் கலவரம் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளதால் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிவனார்குளத்தைச் சேர்ந்தவர் 42 வயதான வேதலிங்கம். இவர் விவசாயி. இன்று மாலை 5 மணியளவில் ஒரு கும்பல் இவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடியது.

இவர் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர். கொலையாளிகள் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையே கலவரம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதையடுத்து சிவனார்குளம் உள்ளிட்ட அருகாமை கிராமங்களில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை நடந்த பகுதியை மாவட்ட எஸ்.பி. விஜேந்திர பிதாரி நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+