'ஐடி ரெய்டு'க்கு அரசியல் தூண்டுதலே காரணம்: நித்தியானந்தா

இதுகுறித்து திருவண்ணாமலை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நான் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றதை சிலர் குறை கூறி வருகிறார்கள். வழக்கும் தொடர்ந்து உள்ளனர். நான் முறைப்படிதான் மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ளேன். இதில் மரபு எதுவும் மீறப்படவில்லை. மதுரை ஆதீனமாக பொறுப்பு வகிக்க எனக்கு எல்லா வித தகுதியும் இருக்கிறது.
எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்துதான் என்னை மதுரை ஆதீன மடாதிபதியாக நியமித்தார்கள். சிலர் வேண்டுமென்றே பொய் யான தகவல்களை கூறுகிறார்கள். இதில் எந்த மரபோ, விதிமுறையோ மீறப்படவில்லை. யாரும் யார் மீது வேண்டு மானாலும் குற்றப்பின்னணியை கூற முடியும். யாரும் கோர்ட்டிலும் வழக்கு போடலாம். அதே போல்தான் என் மீதும் ஒரு வழக்கு உள்ளது. அது பொய்யானது அந்த வழக்கு தூங்கி கொண்டு இருக்கிறது.
எனது அறக்கட்டளை மூலம் மதுரை ஆதீன அறக்கட்டளைக்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டது இது வெளிப் படையானது. அதில் எந்த முறைகேடும் இல்லை. இதுபற்றி பத்திரிகைகளுக்கு வெளிப்படையாக அறிவித்து இருந்தேன். இதை பார்த்து விட்டுதான் அரசியல் தூண்டுதலின் பேரில் மடத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனைக்கு வந்தார்கள். பார்த்தார்கள். எந்த விதமான முறைகேடும் நடைபெற வில்லை. என்பதை அறிந்து சென்றார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications