தேர்வு பயத்தால் மாணவர்கள் மடிவதை தடுக்கவேண்டும்: வைகோ

ம.தி.மு.க.வின் 19-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ பேசுகையில்,
ம.தி.மு.க. 19-வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஏற்கனவே பல இன்னல்களையும் சோதனைகளையும் சந்தித்து விட்டோம். இனி நாங்கள் எழுச்சி பெறுவோம். தமிழகத்தில் மாற்றம் வரும். அந்த மாற்றத்தில் ம.தி.மு.க. மகுடம் சூட்டும்.
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் தொடர்ந்த அதே திருட்டு இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. 1 பவுன் நகைக்காக வயதான மூதாட்டியின் கழுத்தை அறுத்து சென்று விடுகின்றனர்.
மதுவின் பிடியில் இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல மதுவை ஒழிக்க வேண்டும்.
ராஜபக்சேவின் கொடுங்கோல் ஆட்சியால் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது உலக தமிழர்களிடம் வேதனையை உருவாக்கியுள்ளது. ராஜபக்சே தமிழர்களை கொன்று குவித்ததற்கு மத்திய அரசு தான் காரணம். இதில் மத்திய அரசில் அங்கம் வகித்தவர்களும் குற்றவாளிகள்தான்.
இந்த வருடத்தில் தேர்வு பயத்தால் 19 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இது தவிர்க்கபட வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications