பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் விண்ணப்ப விற்பனையை இன்று காலை தொடங்கி வைத்தார்.
மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 58 மையங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆண்டு மொத்தம் 2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி மே31.
பொதுப்பிரிவினருக்கு ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.500. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, அருந்ததியின மாணவர்கள் தங்களது ஜாதி சான்றிதழின் நகலைக் காண்பித்து ரூ.250-க்கு விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்ப விநியோக மையங்களில் நேரில் சென்று பணமாகவோ, வரைவோலையாகவோ செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
அண்ணா பல்கலைக்கழகம், பல்கலைக்கழகக் கல்லூரிகள், அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என சுமார் ஒன்றரை லட்சம் இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜூலை 2-ம் தேதி இந்த கலந்தாய்வு தொடங்க உள்ளது.












Click it and Unblock the Notifications