அசாம், மேகாலயாவில் நிலநடுக்கம் - ரிக்டரில் 5.3 அலகுகளாகப் பதிவானது- கொல்கத்தாவிலும் பீதி
Subscribe to Oneindia Tamil
கவுகாத்தி: அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.
அசாமின் தேஸ்பூரை மையமாகக் கொண்டு மாலை 6.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம் தலைநகர் கவுகாத்தி, மேகலாயாவின் தலைநகர் ஷில்லாங்கில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதேபோல் மேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
10-15 வினாடிகள் வரை நீடித்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் குவிந்தனர்.












Click it and Unblock the Notifications