மகனுக்கு ஆதாயம் கருதியே ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்தத்தை அனுமதித்தார் சிதம்பரம்- பாஜக
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. மேக்சிஸ் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை ப. சிதம்பரத்தின் மகன் பெற்றுள்ளார். இதைத் அறிந்தே ஒப்பந்தத்துக்கு சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார். இதை ஆதாயம் கருதி அவர் செய்துள்ளார் என்று பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
லோக்சபாவில் நேற்று இதுதொடர்பாக அவர் பேசுகையில்,
2006-ம் ஆண்டில் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது. இந்திய நிறுவனங்களில் 74 சதவீதம் மட்டுமே அந்நிய முதலீடு செய்ய வேண்டும் என்பது இந்திய அரசு கடைப்பிடித்து வரும் கொள்கை.
ஆனால் மேக்சிஸ் நிறுவனம் 99.3 சதவீத ஏர்செல் பங்குகளை வாங்கியுள்ளதாக மலேசியப் பங்குச் சந்தையில் பதிவாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு வெளிநாட்டு முதலீடு வளர்ச்சி வாரியம் அனுமதி அளித்துள்ளது. அது தொடர்பாக அரசு வெளியிட்ட இரண்டு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த வாரியத்துக்குத் தலைவராக அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இருந்துள்ளார்.
மேக்சிஸ் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை ப. சிதம்பரத்தின் மகன் பெற்றுள்ளார். இதைத் அறிந்தே ஒப்பந்தத்துக்கு சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார். இதை ஆதாயம் கருதி அவர் செய்துள்ளார். தனது மகனுக்கு இந்நிறுவனத்தில் பங்குகள் உள்ளதாகத் தெரிய வந்தவுடனேயே அது சம்பந்தமான கோப்புகளில் கையெழுத்திடாமல் சிதம்பரம் பின் வாங்கியிருக்கலாம்.
இதன் மூலம் இந்த விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது தெளிவாகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பான அனைத்து விவரங்களையும் மத்திய அரசு மூடி மறைக்காமல் வெளிப்படையாக்க வேண்டும் என்றார் சின்ஹா. இதையடுத்தே பாஜகவினர் பெரும் அமளியில் இறங்கினர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications