சுரங்க முறைகேடு வழக்கில் எதியூரப்பாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கங்களுக்கு அனுமதி கொடுத்தது தொடர்பாக முன்னாள் முதல்வர் எதியூரப்பாவிடம் சி.பி.ஐ.விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகத்தில் நடைபெற்ற சுரங்க முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமாஜ பரிவர்தன அமைப்பின் தலைவர் ஹிரேமத் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டவிரோத சுரங்க முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அதிகார குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தக் குழுவும் அண்மையில் தமது அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது.
ஜிந்தால் குழுமத்துக்கு சட்டவிரோதமாக சுரங்கங்களுக்கு அனுமதி கொடுத்ததால் எதியூரப்பா குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளைக்கு நன்கொடை பெறப்பட்டது என்றும் அந்தக் குழு தமது அறிக்கையில் கூறியிருந்தது.
விசாரிக்க உத்தரவு
மத்திய அதிகாரக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைப்படி எதியூரப்பா மீதான புகார்கள் குறித்தும், ஜிந்தால் குழுமம்ம் மற்றும் செளத்வெஸ்ட் சுரங்க நிறுவனத்தின் பங்குகள் குறித்தும் சி.பி.ஐ. விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும் எதியூரப்பா புகார் மீதான நடவடிக்கை அறிக்கையை ஆகஸ்ட் 3-ந் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தகர்ந்த கனவு
சுரங்க முறைகேட்டுப் புகாரினால்தான் எதியூரப்பா தமது முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது. மேலும் சிறைக்குப் போய் விடுதலையாகி வந்த நிலையில் மீண்டும் முதல்வர் பதவி கேட்டு எதியூரப்பா கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இந்நிலையில் உச்சநீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால் மீண்டும் முதல்வர் பதவி என்ற எதியூரப்பாவின் கனவு தகர்ந்துள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications