ராதாகிருஷ்ணன் முதல் கலாம் வரை தென்னகத்தார் ஜனாதிபதியாக நானும் காரணம்- கருணாநிதி

குடியரசுத் தலைவர் நியமனத்தில், மரபுகள் மீறப்படுகின்றன. இதற்கு திமுகவும் துணை போவதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு கருணாநிதி பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், குடியரசுத் தலைவர் பதவியில் அமர இப்பிராந்தியத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் பாடுபட்டனர். அவர்களில் நானும் ஒருவன் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
டாக்டர் ராதாகிருஷ்ணன், நீலம் சஞ்சீவ ரெட்டி, வி.வி.கிரி, ஆர்.வெங்கட்ராமன், அப்துல் கலாம், கே.ஆர்.நாராயணன் ஆகியோர் குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டதில் எனது பங்கும் உண்டு.
தேசிய அளவில் திமுகவின் பலம் என்ன என்பது அனைவருக்குமே தெரியும். அந்த பலத்தைக் கொண்டு குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சில நகர்வுகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். திமுக பலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டோ அல்லது திமுக முடிவை அடிப்படையாகக் கொண்டோ மட்டும் குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற முடியாது. இதையும் அனைவரும் உணர வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications