புதுக்கோட்டையில் வாகன சோதனையில் ரூ 5.5 லட்சம் சிக்கியது!
புதுக்கோட்டை: இடைத்தேர்தல் நடைபெறும் புதுக்கோட்டையில் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் திண்டுக்கல் தொழிலதிபரிடம் இருந்து ரூ 5.5 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்வாகன சோதனை நடத்திய போது, திண்டுக்கல் தொழிலதிபரிடமிருந்து ரூ.5.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் பெரியார் நகரை சேர்ந்த காதர்மொய்தீன். பர்கத் டிரேடர்ஸ் என்ற பெயரில் இரும்பு குழாய் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றார். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கட்டியாவயல் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், அவரது காரை நிறுத்தி திடீர் சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ.5.5 லட்சம் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் கிடைத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது, புதுக்கோட்டை அருகே உள்ள குரும்பலூர் சர்க்கரை ஆலையில், பழைய இரும்பு பைப்புகளை வாங்குவதற்காக ரூ.5.50 லட்சம் எடுத்துச் சென்றதாகக் கூறினார். ஆனால் இதை ஏற்க மறுத்த அதிகாரிகள் உரிய ஆவணங்களை கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினர்.












Click it and Unblock the Notifications