வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
சென்னை: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்கள் மீண்டும் அதைப் புதுப்பித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சட்டசபையில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் செல்லப்பாண்டியன் பேசுகையில், எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி மேற்கொள் காட்டினார். அவர் பேசுகையில்,
2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுகளை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவு மூப்பை மீளப்பெறவும், இதன் மூலம் வேலை வாய்ப்பை பெறறிட உதவிடும் வகையிலும் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும்.
இதனால் 50,000 பதிவுதாரர்கள் பயனடைவார்கள். 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு ரூ.7.5 கோடி செலவில் சொந்த கட்டிடம் கட்டப்படும்.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் ரூ.15 கோடி செலவில் தரம் உயர்த்திய கல்வி நிலையமாக மேம்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications