பேசாம, '49 ஓ' போட்டுடுங்க.. திமுகவினருக்கு மாஜி அமைச்சர் ரகுபதி வேண்டுகோள்!

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது. பாரி வேந்தரின் இந்திய ஜனநாயக் கட்சி போட்டியிடுகிறது. ஆனால் முக்கியக் கட்சியான திமுக புறக்கணித்து விட்டது. அதேபோல சிபிஐ போட்டியிடவில்லை. சிபிஎம் போட்டியிடுமா என்பது தெரியவில்லை. மதிமுக, பாமக ஆகியவையும் ஒதுங்கி விட்டன.
இந்த நிலையில் தேமுதிக போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதனால் அக்கட்சிக்கு திமுகவும், சிபிஎம்மும் ஆதரவு தெரிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆனால் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று திமுகவினர் 49 ஓ படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அக்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரகுபதி கூறியுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு புதுக்கோட்டையில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில்தான் இப்படிப் பேசினார் ரகுபதி. இதனால் திமுகவினர் தங்களது வாக்குகளை தேமுதிகவுக்கு போடுவார்களா அல்லது ஓ போடுவார்களா என்ற சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications