டிஸ்மிஸான விமானிகளுக்கு மூத்த விமானிகள் திடீர் ஆதரவு: சிக்கல் பெரிதாகுமா?

ஏர் இந்தியா விமானிகள் கடந்த 6 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் குறைந்தது 20 சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நிர்வாகத்திற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு தயார் என்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விமானிகள் தெரிவித்துள்ளபோதிலும் யாரும் பணிக்கு திரும்பவில்லை. இதனால் பயணிகள் தான் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் மூத்த விமானகள் சங்கம் தற்போது நடந்து வரும் பிரச்சனைக்கு நிர்வாகத்தை குறை கூறியுள்ளது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட 71 விமானிகளை மீண்டும் பணியில் சேத்துக்கொள்ளுமாறும், விமானிகள் சங்க அங்கீகாரத்தை மீண்டும் வழங்குமாறும், விமானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணுமாறும், போயிங்-787 பயிற்சி தொடர்பாக மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
மூத்த விமானிகள் சங்கத்தில் உள்ள பெரும்பாலான விமானிகள் மேனேஜர் பதிவியில் உள்ளனர். அவசர காலத்தில் விமானத்தை இயக்க நிர்வாகம் அவர்களை தான் நம்பியுள்ளது.
இன்று முதல் மூத்த விமானிகளை வைத்து குறைந்தது 7 சர்வதேச விமானங்களையாவது இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் நேற்றுடன் 6 நாட்களாக நடந்த வேலைநிறுத்தத்தால் நிர்வாகத்திற்கு ரூ.96 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications