நஷ்டம் தொடர்ந்தால் அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு விரைவில் மூடுவிழா?

2005-06ம் ஆண்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் லாபம் எவ்வளவு தெரியுமா? ரூ10 ஆயிரம் கோடி. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக 2010-11-ல் இதன் நட்டம் ரூ6 ஆயிரம் கோடி. 2011-12ல் இன்னும் கூடத்தான் செய்யும். அதே நேரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் 2011-12-ல் ரூ7 ஆயிரம் கோடி இருக்கலாம்.
இதேபோல்தான் மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட்ட் நிறுவனத்தின் கதையும்! 1992-ஆம் ஆண்டு டெல்லி, மும்பையில் தொலைத்தொடர்பு சேவையை இந்த நிறுவனம் மட்டுமே வழங்கி வந்தது. அப்போது இதன் பங்குகள் ரூ370 வரை இருந்தது. இப்ப 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதைப் போல இரண்டு மடங்கு கூடியிருக்க வேண்டும். ஆனால் இல்லையே.. ரூ25தான் அதன் பங்கு மதிப்பு. இதனால் இந்த நிறுவனத்துக்கு நட்டம் ரூ4 ஆயிரம் கோடிக்கு மேல!
மத்திய அரசின் 2 தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நட்டக் கணக்கை ஒப்பிட்டால் ஏர் இந்தியா பரவாயில்லை போல்தான்... இதைக் கணக்கில் கொள்ளாமலேயே பலரும் ஏர் இந்தியாவை மூட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். உண்மையில் இதே நிலை நீடித்தால் நிச்சயமாக 2 தொலைத் தொடர்பு நிறுவனங்களையும் மத்திய அரசு மூடத்தான் வேண்டியிருக்கும்.
தங்களைச் சுற்றியிருக்கும் கடும் போட்டியைக் கண்டுகொள்ளாமல் அல்லது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான வகையில் இந்த நிறுவனங்கள் செயல்படுவதான் நட்டத்துக்குக் காரணம். அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இவ்வளவு நட்டமெனில் தனியார் நிறுவனங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும்!












Click it and Unblock the Notifications