நேபாளத்தில் விமான விபத்து: 13 இந்தியர்கள் உள்பட 14 பேர் பலி, 7 பேர் உயிர் தப்பினர்

Subscribe to Oneindia Tamil

Plane Crash
காத்மாண்டு: வடக்கு நேபாளில் உள்ள ஜோம்சோம் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 21 பேரில 14 பேர் பலியாகினர். பலியானவர்களில் 13 பேர் இந்தியர்கள் ஆவர்.

நேபாள நாட்டைச் சேர்ந்த விமானமான அக்ரி சுற்றுலா விமானம் 16 இந்தியர்கள் உள்பட 21 பேருடன் இன்று காலை தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பிரபல சுற்றுலாத்தலமும் மலையேற்றத்துக்குப் புகழ்பெற்ற இடமுமான ஜோம்சோமுக்கு சென்றது. விமானம் ஜோம்சோம் விமான நிலையத்தில் இன்று காலை 9.45 மணிக்கு தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 21 பேரில் 13 இந்தியர்கள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். அதில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் 7 பேர் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக பொகாரா நகருக்கு ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் விமானிகள் பி.எஸ். பதக் மற்றும் எஸ்.டி. மகாராஜன் ஆகியோர் பலியாகினர்.

சம்பவ இடத்தில் போலீசாரும், ராணுவத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு்ள்ளனர்.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். விமான விபத்து குறித்து விவரம் அறிய விரும்புவோர் 0097714423702 மற்றும் 0097714410900/எக்டன்ஷன் 4109 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+