செட்டாப் பாக்ஸ் மூலம் இனி 500 சேனல்கள்... சென்னையிலும் அரசு கேபிள் - தமிழக அரசு

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தற்போது சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களில் தனது கேபிள் டிவி சேவையை வழங்கி வருகிறது. சென்னை மாநகரில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் இதன் சேவை விரைவில் தொடங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி, அரசு கேபிள் டிவி நிறுவனம் விரைந்து எடுத்து வருகிறது.
அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னையில் புதிய டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறையை நிறுவி 500 சேனல்களை வழங்க உள்ளது. அதில் 20 சேனல்கள் எச்.டி. சேனல்கள் ஆகும். டிஜிட்டல் சிக்னல்களை பெற்று டி.வி. பார்ப்பதற்கு தேவைப்படும் செட்-டாப் பாக்ஸினை வாங்கி நியாயமான விலையில் சந்தாதாரர்களுக்கு வழங்க உள்ளது.
மத்திய அரசு காலக்கெடு
மத்திய அரசின் கேபிள் டிவி திருத்த சட்டம்-2011-ன்படி, சென்னை உள்பட 4 பெருநகரங்கள் வரும் ஜுன் மாதம் 30-ந் தேதிக்குள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் என்றும் ஜுலை 1-ந் தேதி முதல் டிஜிட்டல் சிக்னல் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
மத்திய அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடு மிகவும் குறைவாக இருப்பதாலும், டிஜிட்டல் முறையில் கேபிள் டிவி சேவையை ஆரம்பிக்க செய்ய வேண்டிய பணிகள் அதிக அளவில் இருப்பதாலும், சென்னை மாநகரில் டிஜிட்டல் முறையில் கேபிள் டிவி வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை 6 மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
கேபிள் ஆபரேட்டர்களுக்கு வேண்டுகோள்
அரசு கேபிள் டிவி நிறுவனம் சென்னையில் கேபிள் டிவி சேவையை வழங்குவதற்குத் தேவையான உபகரணங்களை வாங்க விரைவில் டெண்டர் கோர உள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டு, உபகரணங்கள் வாங்கி நிறுவிய பின்னர், சென்னையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கேபிள் டிவி சேவை விரைவில் தொடங்கப்படும்.
சென்னை பெருநகரப் பகுதிகளில் உள்ள, தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு செய்துள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள சந்தாதாரர்களுக்கு வழங்குவதற்காக எவ்வளவு செட்-டாப் பாக்ஸ் தேவைப்படுகிறது? என்ற விவரத்தினை அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள படிவத்தில் ஆன்லைனில் மூலமாக வருகிற 31-ந் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னையில் கேபிள் டிவி ஆபரேட்டராக இருந்து, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு செய்யாமல் விடுபட்ட ஆபரேட்டர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications