இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 100 வயது மூதாட்டி உள்பட 7 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Earthquake
பெராரா: இத்தாலியில் நேற்று ஏற்பட்ட சக்திவாயந்த நிலநடுக்கத்தில் 100 வயது மூதாட்டி உள்பட 7 பேர் பலியாகினர், 50 பேர் காயம் அடைந்தனர்.

இத்தாலியின் வடகிழக்கில் உள்ள எமிலியா ரொமாக்னா பகுதியில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6க பதிவாகியிருந்தது. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தில் 100 வயது மூதாட்டி, 86 வயது மூதாட்டி உள்பட 7 பேர் பலியாகினர். பெராரா நகருக்கு அருகே உள்ள 3 தொழிற்சாலைகள் இடிந்து விழுந்தன. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 4 கட்டுமானத் தொழிலாளிகள் உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மேலும் பாரம்பரிய மிக்க கட்டிடங்கள், தேவாலயங்கள் இடிந்தன.

இந்த நிலநடுக்கத்தால் 3,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேட்டோ நாடுகளின் சந்திப்புக்காக அமெரிக்கா சென்றுள்ள இத்தாலிய பிரதமர் மாரியோ மாண்ட்டி தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்புகிறார்.

பெராரா, பொலோக்னா, வெரோனா மற்றும் மான்டுவா ஆகிய நகரங்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மொடினா, டஸ்கனி, பெய்ட்மோன்ட் மற்றும் லம்பார்டி ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது. அங்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+