பிரதமர் பதவியில் மோடி அமர டிவிட்டரில் குவியும் ஆதரவு!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது 3வது ஆண்டை பூர்த்தி செய்து அதை விருந்து வைத்துக் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், இந்தச் செய்தி நிச்சயம் அந்த கூட்டணியின் தலைவர்களுக்கு கசப்பான ஒன்றாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. முதல் ஆட்சியையும் சேர்த்து எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு செல்வாக்கு சரிந்து விட்டது, ஆட்சி மக்கள் ஆதரவை இழந்து விட்டது என்று இரண்டு கருத்துக் கணிப்புகள் கூறியிருப்பது நிச்சயம் காங்கிரஸுக்கும், அதன் தலைவர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
முதலில் ஏபிபி-நீல்சன் கருத்துக் கணிப்பு வெளியானது. அதில் மோடிதான் அடுத்த பிரதமராக வேண்டும் என்று 17 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரெல்லாம் மோடிக்குப் பின்னர்தான் வருகின்றனர். மேலும், மக்கள் ஆதரவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இழந்து விட்டதாகவும் இந்தக் கருத்துக் கணிப்பு ஆணித்தரமாக தெரிவித்திருந்தது.
இதையடுத்து சிஎன்என்-ஐபிஎன் கருத்துக் கணிப்பு வெளியானது. அதிலும் மோடிக்கே பெரும் ஆதரவு இருந்தது. மேலும், மன்மோகன் சிங் அரசு மக்கள் ஆதரவை இழந்து விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது மோடியை ஆதரித்து டிவிட்டரில் செய்திகளைக் குவிக்க ஆரம்பித்து விட்டனர் மோடி ஆதரவாளர்களும், பாஜகவினரும், பாஜக அனுதாபிகளும். கடந்த 12 மணி நேரமாக மோடி ஆதரவுக் குரல்களால் டிவிட்டர் அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.
மோடிதான் சரியான மாற்றத்தைத் தருவார், மாற்றுத் தலைமையைத் தருவார் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் குஜராத் மாநிலத்தில் மோடி ஏற்படுத்திய மாற்றங்களை, நிர்வாக சீர்திருத்தத்தை, மின்வெட்டில்லாத சூழ்நிலையை ஏற்படுத்தியது உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு மோடியைப் புகழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவுக்கு தற்போது பொருத்தமான தலைவர் மோடிதான் என்று பலரும் கூறியுள்லனர். மோடி பிரதமரானால், ராணுவத்துக்கு பெரும் கெளரவம்கிடைக்கும் என்று ஒருவர் எழுதியுள்ளார்.
மோடி பிரதமரானால் காந்தி கண்ட கனவான ராம் ராஜ்ஜியம் ஏற்படும் என்று ஒருவர் புகழ்ந்துள்ளார். இன்னொருவரோ, சர்தார் வல்லபாய் படேல் பிரதமரானால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் மோடி பிரதமரானால் என்று சிலாகித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் இந்தியர்களும் கூட மோடியைப் பற்றித்தான் தற்போது டிவிட்டரில் அதிக கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனராம்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications