சிறையிலிருந்து விடுதலையானார் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின்போது ராணுவத்தில் இருந்து தப்பி ஓடியோருக்கு அடைக்கலம் கொடுத்தது மற்றும் வெள்ளைக் கொடி ஏந்தி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை படுகொலை செய்தது உள்ளிட்ட வழக்குகளின் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ராணுவத்தில் இருந்து தப்பியோடியருக்கான வழக்கில் ஜாமீன் கிடைத்தது. வெள்ளைக் கொடி வழக்கில் அவரை விடுதலை செய்ய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கபப்ட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த பொன்சேகா ஆதரவாளர்களிடம் அவர் பேசியதாவது:
எனக்காக மக்கள் சிந்திய கண்ணீரை நான் ஒருபோதும் மறந்துவிட மாட்டேன். எனக்கு நேர்ந்த அசாதாரணத்துக்காக மக்கள் பட்ட வேதனையையும் மறந்துவிட மாட்டேன்.
இன்று முதல் மக்களுக்கான எனது பணி மீண்டும் தொடரப்போகிறது. எமது மக்களுக்காக என்னை நான் தியாகம் செ ்வேன். மக்கள் எனக்கு மிகப் பெரும் சக்தியை வழங்கியுள்ளனர் என்றார் அவர்.
நாடாளுமன்றம் போக முடியாது
இதனிடையே இலங்கையின் அரசியலமைப்பின் படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள் ஏழு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவோ அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடவோ முடியாது. பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது சரத் பொன்சேகாவின் சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தை மட்டுமே குறைத்துள்ளது என்கின்றனர் இலங்கை அரசு அதிகாரிகள்.
இதனால் சரத்பொன்சேகா நாடாளுமன்றத்துக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எப்போது பொன்சேகாவின் சிறைத் தண்டனை குறைக்கப்படுகிறோ அப்போதுதான் அவர் அரசியலில் ஈடுபட முடியும் என்றும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications